செவ்வாய், மார்ச் 21, 2006

விருந்துக்கும் பந்திக்கும் என்ன வேறுபாடு?

ஒரு முறை வலைப்பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வலைப் பதிவின் தமிழ் இலக்கணம் கசக்குமா? என்ற பதிவின் பின்னூட்டத்தில் யாரோ ஒரு சகோதரர் விருந்துக்கும் பந்திக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டிருந்தார். இது சம்பந்தமாக ஒரு பதிவு எழுதி அதை அந்த பதிவிற்கு இணைப்பு கொடுக்கலாம் என்று நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் என்னால் அந்த பதிவை கண்டு பிடிக்க முடியவில்லை. யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து இதை அந்த சகோதரருக்கு தெரியப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பந்திக்கு முந்திக்கொள். படைக்குப் பிந்திக்கொள். இந்த பழமொழியைக் கேட்டிருக்காதவர் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பிரபலமானது. இதன் அர்த்தம் சாப்பாட்டிற்கு முந்திக் கொள் - ஏதாவது சண்டை பிரச்சினை என்றால் ஓடி ஒளிந்துக் கொள் என்பது தானே. அப்படி அல்ல. தமிழில் அழகான, கருத்துச் செறிவுள்ள பல பழமொழிகள் இருந்தாலும் அவற்றில் சிலவற்றிற்க்கு நாம் தவறான அர்த்தத்தையே விளங்கி வைத்திருக்கிறோம். அப்படிப் பட்ட சில பழமொழிகளில் ஒன்று தான் இதுவும்.

முன்னர் முடியாட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாடும் தனது நாட்டைக் காக்க நான்கு வகைப் படைகளைக் கொண்டிருந்ததை நாமெல்லாம் அறிவோம். அவை 1. காலாட் படை, 2. குதிரைப் படை, 3. யானைப் படை மற்றும் 4. தேர்ப் படை ஆகியவை. இதுவும் நாம் அறிந்ததே. ஆனால் நம்மில் பலர் அறியாத ஐந்தாவது படை ஒன்றும் இருந்தது. அந்த ஐந்தாவது படையில் மொத்தம் ஏழு (எத்தனை என்று சரியாக நினைவில்லை) வரிசைகள் (ஆங்கிலத்தில் Line அல்ல. Batch என்று சொல்லலாமா?) இருந்தன. அந்த வரிசைகளுக்கு பந்திகள் என்றுப் பெயர்.

ஒரு நாட்டின் இராணுவ பலத்திற்கு படை வீரர்களின் எண்ணிக்கையும் மிக முக்கியமானது. அதற்காக நாட்டில் உள்ள அனைத்து ஆண்களும் இராணுவத்தில் சேர்ந்து விட்டால் நாட்டின் விவசாயம் போன்ற வளர்ச்சிப் பணிகளில் யார் ஈடு படுவது? அதனால் முறையான பயிற்சி பெற்ற ஒரு பிரிவினர் நான்கு படைகளிலும் மற்றொரு பிரிவினர் அதாவது சரதாரண குடிமக்கள் நாட்டின் வளர்ச்சிப் பணிகளிலும் ஈடு பட்டிருந்தனர். இந்த இரண்டாவது பிரிவினர் நாட்டிற்கு ஆபத்தான கட்டத்தில் மட்டும் போர்களில் ஈடுபடுவார்கள்.

இதில் நாட்டு மக்களால் சிறப்பாக கருதப் பட்டது எதுவென்றால் ஐந்தாவது படையின் முதல் பந்தித் தான். இதன் காரணம் மக்கள் உழைப்பிற்கு கொடுத்த முக்கியத்துவமே. அதே சமயம் இதை காரணம் காட்டி கோழையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஐந்தாவது படையின் முதல் பந்திக்கு முந்திக் கொள்ள வலியுறுத்தவே பந்திக்கு முந்திக்கொள். படைக்குப் பிந்திக்கொள் என்ற பழமொழி ஏற்பட்டது.

இந்த பழமொழியில் வரும் பந்தி என்ற தூய தமிழ் வார்த்தையைத் தான் நாம் விருந்து நடக்கும் போது நடை பெறும் வரிசையை (Batch)குறிக்க அதாவது முதல் பந்தி இரண்டாவது பந்தி என்று சொல்லுவதற்கு பயன் படுத்துகிறோம். இன்றளவும் முஸ்லிம்களின் வீடுகளில் நடக்கும் விருந்துகளில் எத்தனையாவது பந்தி நடக்கிறது என்று கேட்பதை நாம் கேட்டிருப்போம். அதே போல் நாம் விருந்துக்கு போகிறோம் என்று தான் கூறுவோம். மாற்றிக் கூறுவதில்லை. ஆக விருந்து என்பது வேறு. பந்தி என்பது வேறு.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்னை தானே வளரும். இந்த பழமொழியின் விளக்கம் தெரியுமா? இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்.

3 கருத்துகள்:

இராஜகிரியார் சொன்னது…

test

அசுரன் சொன்னது…

இராஜகிரியாரே வணக்கம், நான் புதியவன், எனக்கு ஐந்தாம் படையின் முதல் வரிசையை பற்றிய வரலாற்று குறிப்பு ஏதாவது சொல்லமுடியுமா?
ஏனெனில்....... யாரை கேட்டாலும் பந்திப்படை என்று ஒன்று இல்லை என்றே சொல்கிறார்கள்........ அதனால் தமிழ்மீது உள்ள ஆர்வத்தில் கேட்கிறேன்

அன்புடன்
புதியவன்

இராஜகிரியார் சொன்னது…

முதலில் என்னை மன்னிக்வும் புதியவரே... மிகவும் தாமதமாக தங்களுக்கு பதில் எழுதுகிறேன். முன்பு போல் என்னால் அவ்வளவாக நேரம் ஒதுக்கு முடிவதில்லை.

மேலும் பண்டை காலத்தில் அவசர கால தேவைக்காக பொது மக்களிலேயே ஒரு பிரிவினர் ஐந்தாவது படையாக செயல் பட்டனர். அதில் 5 அல்லது 7 பிரிவுகள் இருந்நன. அந்ந பிரிவுகளுக்குப் பெயர் தான் பந்திகள்.

இதற்க்கான ஆதாரம் என்று தேடினால் கிடைக்கும். ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல் என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. பொறுப்பில்லாமல் பதில் கூறுவதாக நினைக்க வேண்டாம். என் சூழ்நிலை அவ்வாறு. இருப்பினும் நான் ஒரு யோசனையாவது கூறுகிறேன். நீங்கள் ஏதாவது தமிழ் தட்டச்சு பயிலகத்தில் முயற்சித்தீர்களானால் அங்கு பயிற்சி செய்வதற்கான தமிழ் பயிற்சி ஏடுகள் கிடைக்கும். அவற்றில் இதற்கான முழு விவரங்களும் கிடைக்க வாய்ப்பருக்கிறது. அவ்வாறு கிடைத்தால் தயவு செய்து எனக்கும் தெரியப் படுத்துங்கள்.

சிரமத்திற்கு மன்னிக்கவும். மிக்க நன்றி.

இங்ஙனம்,

எம் தாய்மொழியாம் தமிழ் மீது தீராத காதல் கொண்ட இராஜகிரியார்.