சனி, மார்ச் 25, 2006

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்...

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாகவே வளருமா? எங்கே செய்து பாருங்கள். வளர்கிறதா என்று பார்ப்போம்.

நாம் தவறாக விளங்கி வைத்திருக்கும் சில பழமொழிகளில் இதுவும் ஒன்று. என்ன ஒரு சமாதானம். என்ன தான் தவறாக விளங்கி வைத்திருந்தாலும் இந்த பழமொழியைப் பொறுத்தவரை நல்லவிதத்தில் பொது நலச் சிந்தனையோடு தான் விளங்கி வைத்திருக்கிறோம். நாம் விளங்கி வைத்திருப்பது போன்று என்னதான் ஊரில் உள்ள பிள்ளைகளையெல்லாம் ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் தன் பிள்ளைகளையும் அன்போடும், பாசத்தோடும் அரவணைத்து ஊட்டி வளர்த்தால் தான் வளரும். அப்படியானால் இந்த பழமொழி எதைத் தான் சொல்ல வருகிறது?

முதலில் நாம் ஒன்றை சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். என்னதான் தன்னுடைய பிள்ளையாக இருந்தாலும் பிள்ளையைப் பெற்றெடுப்பதென்னவோ மனைவி தான்.

இப்பொழுது மனைவி என்பவளும் ஊரில் உள்ள யாரோ ஒருவரின் பிள்ளைதான் இல்லையா?

தன் பிள்ளையை வயிற்றில் சுமந்திருக்கும் ஊரான் பிள்ளையாகிய தன் மனைவியை அவள் கருவுற்றிருக்கும் போது ஊட்டி ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது தான் இதன் கருத்து.

இவற்றைப் போல் தவறாக விளங்கப் பட்ட இன்னும் சில பழமொழிகளும் தமிழில் உள்ளன. அவற்றிற்கான பொருள்களை யாராவது தெரிந்தவர் இருந்தால் - அவற்றிற்கு விளக்கமளித்தால் மிகவும் பயனாக இருக்கும்.

1 கருத்து:

வல்லிசிம்ஹன் சொன்னது…

nalla pathivu Rajagiri sir.
Intha vilakkam ippothu thaan therikirathu. nanRi. Ezhisai.